தமிழ் நாட்டில் பொதுமுடக்கம் 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன..! Tamil Nadu lockdown details.
தமிழ்நாட்டில் கொரோனா Corona பாதிப்பு சென்னையில் மிக அதிகளவில் பதிவாகிவருகிறது. சென்னையைத் தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் lockdown பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. பாதிப்பு அதிகமானதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7ஆவது முறையாக மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, ஐசிஎம்ஆர் ICMR பிரதீப் கவுர், அப்பல்லோ மருத்துவர் ராம சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றும் சௌம்யா சுவாமி நாதன் காணொலி காட்சி மூலம் இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா corona வைரஸ் தொற்றின் தீவிரம் எப்படி உள்ளது, எதற்காக பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் CM பொதுமுடக்கம் lockdown நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுத்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இயங்கிவந்த சிறப்பு ரயில்களை special train ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட பொதுமுடக்கம் lockdown 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன.
Stay home stay safe.
நன்றி.
Spending Time.
No comments:
Post a Comment