பொதுவாக முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் எதார்த்த ஆசையே..! இதில் பெண்கள் ஆண்கள் என பாகுபாடு எப்போதும் கிடையாது.
முகம் வெள்ளையாக மற்றும்அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ!
முகம் வெள்ளையாக டிப்ஸ் சிலருக்கு சருமம் எப்போதும் பார்ப்பது கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
இருப்பினும் சருமத்தை வெள்ளையாக மாற பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் இருக்கின்றன.
◆ தக்காளி
தக்காளி சருமத்தை ஒரே இரவில் வெளுக்க செய்கிறது.
அதாவது தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும்.
பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.
இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.
◆ தக்காளி
தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி கொள்ளவும், பின்பு அந்த தக்காளி பழத்தை முல்தானி மெட்டியில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின்பு அவற்றை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, சில நாட்களில் முகம் வெள்ளையாக மாறுவதை தாங்கள் உணர முடியும்.
◆ வறண்ட முகத்தை இயல்பாக மாற்ற!
முதலில் 3-4 டீஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு, அதோடு சிறிது ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின்பு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு பாதாமை தூளாக பொடி செய்து அதனுடன் சேர்த்து கொண்டு நன்கு கலக்கி முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு தண்ணீரில் கழிவி விடவும். இவ்வாறு செய்வதால் வறண்ட முகம் மென்மையாக மாறும்.
◆ கதாநாயகனை போல முக அழகை பெற!
கதாநாயகனை போல முக அழகை பெற இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள். முதலில் ஒரு தக்காளியை பாதியாக அரிந்து, ஒரு பாதியை மஞ்சளை பூசி முகத்தில் மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடம் கழித்து இதனை கழுவி விடுங்கள். அடுத்து இன்னொரு பாதியை எலுமிச்சை சாறு கலந்த சர்க்கரையை தடவி முகத்தில் பூசவும். இது முகத்தில் உள்ள எல்லா வகையான அழுக்குகளையும் அகற்றி சுத்தமான சருமத்தை ஏற்படுத்தும். அத்துடன் முகம் மினுமினுவென மின்னும்.
No comments:
Post a Comment